எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரையாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதே போல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.
அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த காலாண்டு தேர்வை போல் அரையாண்டு தேர்விலும் இதே போல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட உள்ளது.
தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை எமிஸ் என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்ய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


