முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் தி.மு.க. எம்.பி.

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : இந்தி மாநிலங்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார் தி.மு.க. எம்.பி செந்தில் குமார். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன் என்றும்  அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பா.ஜ.க. பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்ல முடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே கவர்னர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள்.

பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா' மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. இதுவே பா.ஜ.க.வின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. செந்தில் குமாரின் இந்த பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் கண்டித்துள்ளனர். தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் எம்.பி செந்தில்குமாரை கண்டித்து, அவரது கருத்தை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் பாராளுமன்ற மக்களவையில் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் தமது பேச்சுக்கு தி.மு.க. எம்.பி செந்தில்குமார் வருத்தமும், மன்னிப்பும் கேட்டு எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் குமார் பதிவிட்டுள்ளதாவது., நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து