எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
சத்தீஷ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் அவரவர் செய்த குற்றங்களின் அடிப்படையில் தேடப்படுபவர்களின் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு. மேலும், அரசின் முயற்சிகளால் சில மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த 20 நக்சலைட்டுகள் நேற்று தங்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகளில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் கொள்கைகளை பரப்புதல், நக்சலைட்டுகள் ஆதரவு போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து சரணடைந்த அனைவருக்கும் மறுவாழ்வு கொள்கை மூலம் திருந்தி வாழ அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


