முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பும் என அரசு தரப்பு வாதம்:அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை:லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குநர் அங்கித் திவாரியை கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கித் திவாரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், ‘எனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே கைது செய்யப்பட்டு 80 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்ற பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்’ என்று அங்கித் திவாரி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி,‘சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைக்கு மட்டுமே இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் தான் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. இந்நிலையில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பக்கூடும். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து அங்கித் திவாரி தரப்பு வழக்கறிஞர், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து