முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      தமிழகம்
Gun 2023-10-05

Source: provided

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். 

 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கத்தில் அணு உலை அமைந்துள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் கல்பாக்கம் அணு உலையின் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கல்பாக்கம் அணுஉலையில் நேற்றுமுன்தினம் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் ஈடுபட்டு இருந்தார்.

பணி முடிந்து துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக அணுமின் நிலைய ஒப்பந்த பேருந்தில் கிரண் உள்பட தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரவி கிரண் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பேருந்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவி கிரண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து