முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் கட்ட தேர்தல் : வாக்களித்த பின் தாயுடன் செல்பி எடுத்த ராகுல் காந்தி

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Rahul 2024-05-25

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்திய பின் தனது தாய் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி செல்பி எடுத்து கொண்டார். 

நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்   7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று  டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் நடந்தது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல்  காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பின் வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்த இருவரும் செல்பி எடுத்துக் கொண்டனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து