எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார்.
நான்காவது காலிறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்திய அணி 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரரானார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________
தங்கம் வென்றார் ஜோகோவிச்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸுடன் மோதிய இறுதிப் போட்டியில் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று அசத்தினார். இதுதான் ஜோகோவிச்சின் முதல் தங்கம். மேலும் ஆடவர் டென்னிஸ் ஒலிம்பிக்கில் வயதான வீரர் (37) ஒருவர் தங்கம் பெறுவதும் இதுவே முதல்முறை.
தனது வெற்றியில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தங்கத்தையும் சேர்த்துள்ளார். 2008இல் வெண்கலம் வென்ற ஜோகோவிச்சுக்கு இது 2ஆவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் இரண்டு முறை அலகராஸுடம் தோல்வியுற்ற ஜோகோவிச் இதில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
____________________________________________________________________
மனு பாக்கருக்கு கவுரவம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான மயிரிழையில் ஒரு பதக்கம் நழுவிப்போனது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்து இருப்பார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், "இறுதிப்போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. இரண்டு பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். ஆனால் தற்போது இந்த பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலை இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. என்னுடன் பணியாற்றிய பயிற்சி குழுவினர், உதவியாளர்கள் மற்றும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அனேகமாக இதை விட சிறப்பாக முடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
____________________________________________________________________
அரையிறுதியில் லக்சயா தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சபா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். வெண்கல பதக்கத்திற்கானே போட்டியில் அவர் விளையாட உள்ளார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான விக்டர் அக்செல்சன்னை எதிர் கொண்ட லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார். இன்று ( ஆக.,05) வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் போட்டியில் லக்சயா சென், மலேஷியாவின் லீ ஜி ஜியா என்ற வீரரை எதிர்கொள்கிறார்.
____________________________________________________________________
காலிறுதியில் லவ்லினா தோல்வி
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்வினா காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (ஆக.,04) நடந்த காலிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கடுமையாக போராடி தோல்வி அடைந்தார். லி குயான் 4- 1 என்ற புள்ளிக்கணக்கில் லவ்லினாவை வீழ்த்தினார்.
____________________________________________________________________
தடை தாண்டும் ஓட்டம்: பாருல் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி அடைந்தார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நேற்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாருல் செளத்ரி பங்கேற்றார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால், தடை தாண்டும் ஓட்டத்தில் பாருல் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
அதன்படி, தடை தாண்டும் ஓட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 3 மீட்டரை 9:23.39 விநாடிகளில் கடந்தார். இந்தத் தொடரில் இது அவரின் சிறப்பான ஆட்டமாகும். எனினும் பட்டியலில் அவர் 8வது இடத்தை மட்டுமே பிடித்தார். கென்யாவின் பேட்ரிஸ் சேப்கோயேச் 9:13.56 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதால், பாருல் செளத்ரி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
____________________________________________________________________
பீச் வாலிபாலால் விவாதம்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற பெண்கள் பீச் வாலிபால் ஆட்டத்தில் ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினி உடை அணிந்து போட்டியில் களமிறங்கிய நிலையில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


