எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, “குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்படும், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும்” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை, சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை - புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நேற்று தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். கொடி வணக்கம் செலுத்திய பின்னர் உரையாற்றினார். பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என மேற்கோள் காட்டி தந்து உரையை தொடங்கினார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், அதிகாரிகள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். நம் நாட்டின் நீண்ட விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவர்களை இந்த அரசு போற்றுகிறது. பன்முகத்தன்மையின் அடையாளம் தேசியக் கொடி.
இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்வர்கள் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது. நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக இந்த வீர விடுதலைத் திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு
30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி.
-
தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்
30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா
-
63-வது குருபூஜை - 118-வது ஜெயந்தி விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Oct 2025மதுரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.10.2025) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு
-
பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு
30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது.
-
கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்
30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2025.
30 Oct 2025 -
ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்
30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
-
ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்
30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது.
-
சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்
30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம்: நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
30 Oct 2025மதுரை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க பரிந்துரை செய்வோம் என்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்
30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
மதுரையில் தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை
30 Oct 2025மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
30 Oct 2025சென்னை, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய
-
தங்கம் விலை உயர்வு
30 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.
-
தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்
30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தான தலைவர் தகவல்
30 Oct 2025திருப்பதி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு
30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார்.
-
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
30 Oct 2025மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு
30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்.
-
பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை
30 Oct 2025சென்னை, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
30 Oct 2025மதுரை, நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசு பச்சை பொய் கூறுகிறது என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும், அ.தி.மு.க.
-
33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!
30 Oct 2025நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி
30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார்.
-
பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரம்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
30 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் பணி அனுமதியை புதுப்பிக்கும் விவகாரத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ஏள புதிய முடிவால் அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை


