எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிதம்பரம், மயிலாடுதுறை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரை பார்ப்பதற்காக தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றார். பின்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்த யாசர் அராபத் ( 40) என்பவர் ஒட்டி வந்தார். காரில் நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த ஹாஜிரா பேகம் (62), திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஹராபத் நிஷா ( 30) அவரது குழந்தை அப்னான் (வயது 3) ஆகியோர் பயணம் செய்தனர். காரை யாசர் அராபத் ஒட்டி வந்தார்.
இந்த கார் நேற்று அதிகாலை சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி கார் மீது மோதியது. இதில் இடுபாடுகளில் சிக்கிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


