எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சுற்றுப்பயணம்...
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிக்கெட் விற்பனை...
இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
கூடுதல் நெருக்கடி...
இந்நிலையில் வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது, இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.
2021ம் ஆண்டு...
சேப்பாக்கத்தில் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்காக டிக்கெட் விலை 200 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் டிக்கெட் 200,400,1000 ரூபாயாகவும், ஐந்து நாள் டிக்கெட் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் டிக்கெட் கவுண்டரிலும், சீசன் டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
கவுதம் காம்பீர்...
கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக பொருப்பேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றியோடு கணக்கை தொடங்க இந்திய அணி காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயத்தில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது அந்த இடத்தை தக்கவைக்க இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மைதானத்தில் வாஷ் அவுட் செய்து இந்தியா வந்துள்ள வங்கதேச அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4வது இடத்திலிருந்து முன்னேறுவதற்காக போராடவுள்ளனர்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட் கோலி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் கார் விபத்தில் சிக்கி அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் ரோஹித், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்க பூமி என்பதால் தமிழ்நாடு வீரர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.
வெற்றி கட்டாயத்தில்...
வங்கதேசம் அணியை பொருத்தவரை இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் இம்முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. நஜ்முல் தலைமையிலான வங்கதேசத்தில் சஹிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்தபிஷூர் ரஹிம் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். இதே போல் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான மைடி ஹசன், டஜூல் இஸ்லாம் ஆகியோர் அசத்த காத்திருக்கின்றர். டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
ஆடுகளம் ஒரு பார்வை
சென்னை சேப்பாக்கத்தில் செம்மண் நிற ஆடுகளம் இந்தியா- வங்காளதேசம் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். கருமைநிற ஆடுகளம் தான் சுழலுக்கு நன்கு கைகொடுக்கும். ஆனால் சென்னையில் கடுமையான வெப்ப நிலை காணப்படுவதால் ஆடுகளம் சீக்கிரமாக சிதைவதற்கு வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழலில் சுழற்பந்து வீச்சும் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க. அழித்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு
31 Jul 2025புதுடெல்லி, அதானிக்கு உதவுவதற்காக பா.ஜ.க. அரசு இந்திய பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார் இ.பி.எஸ்.
31 Jul 2025ராமநாதபுரம், ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அ.தி.மு.க.
-
ஆணவ கொலைகளுக்கு சாதி பெருமைதான் காரணம்: திருமாவளவன் பேட்டி
31 Jul 2025சென்னை, சாதிப் பெருமைதான் ஆணவக் கொலைகளுக்கு காரணம் என்று திருமாவளவன் கூறினார்.
-
ஒரே நாளில் 2-வது முறையாக முதல்வருடன் ஓ.பி.எஸ். சந்திப்பு
31 Jul 2025சென்னை, காலையில் பூங்காவில் நடைபயிற்சியின்போது சந்தித்த நிலையில், மீண்டும் முதல்வரை ஓ.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
இந்திய நலன்களில் சமரசம் இல்லை: அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
31 Jul 2025புதுடில்லி, இந்திய நலன்களில் சமரசம் இல்லை என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
-
மாலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யா சிங் உள்பட 7 பேரும் விடுதலை
31 Jul 2025மும்பை, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.
-
சீனாவில் கனமழைக்கு 44 பேர் பலி
31 Jul 2025பீஜிங்: சீனாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் 44 பேர் பலியானதாகவும் 9 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
2-வது நீண்டகால இந்திய பிரதமர்: மோடிக்கு அமீரக அதிபர் வாழ்த்து
31 Jul 2025அபுதாபி: இந்திய பிரதமர் மோடிக்கு அமீரக அதிபர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம்
31 Jul 2025புதுடெல்லி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
தொடர்ந்து முடங்கும் பாராளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
31 Jul 2025புதுடெல்லி: அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பட
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு
31 Jul 2025சென்னை, முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
நட்புடன் நலம் விசாரிப்பு: பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி
31 Jul 2025சென்னை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.