முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2025      இந்தியா
Priyanka-Protest-2025-07-31

புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.

சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதோரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கேரள எம்.பிக்கள் நடத்திய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தின்போது பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கேரள கன்னியாஸ்திரிகள் மீது வீண் பழி சுமத்தி அவர்களை கைது செய்துள்ளனர். போலீஸார் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். சிறுபான்மையினர் மீதான இந்த வகையான தாக்குதல்களுக்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்” என்றார்.

அதேநேரம் இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் கேரள எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய போராட்டத்தில் சசி தரூர் கலந்து கொண்ட நிலையில், பிரியங்கா தலைமையிலான போராட்டத்தை அவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து