எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை:கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் ரயில்...
திருவனந்தபுரம் - டெல்லி இடையே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மாலை 3.05 மணியளவில் சோரனூர் பாலத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, சோரனூர் ரயில்வே பாலத்தில் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
தூய்மை பணியில்...
வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ரயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சேலத்தை சேர்ந்த...
தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த 3 பேரிடன் உடலைகளையும் மீட்டுள்ளனர். ஆனால், ரயில் மோதியதில் பாரதபுலா ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மற்றொரு ஊழியரின் உடலை தேடி வருகின்றனர். ரயில் மோதியதில் உயிரிழந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மை பணியாளர்களும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.
நிவாரணம் அறிவிப்பு...
இந்நிலையில் கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிர்ச்சி, வேதனை...
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது., கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று முன்தினம் (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(வயது 55) த/பெ.அண்ணாமலை, வள்ளி (வயது 45) க/பெ.லட்சுமணன், காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) த/பெ.ராமசாமி, மற்றும் அல்லிக்குட்டையைச்சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) த/பெ.வீரன் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.
தலா ரூ.3 லட்சம்...
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


