எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் தொடங்கியது. முதல் நாளில் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்கியது. இதில் வங்காளதேசம் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 71.5 ஓவர்களில் 164 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெய்ட் 33 ரன்னுடனும், கார்டி 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
______________________________________________________________________________________
பும்ராவுக்கு இங்கி. வீரர் புகழாரம்
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0 (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது., ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.
______________________________________________________________________________________
சிராஜுக்கு பும்ரா அட்வைஸ்
ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள் என்று இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா அறிவுரை வழங்கியதாக சிராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் எப்போதும் பும்ரா பாய் உடன் பேசிக்கொண்டே இருப்பேன். முதல் போட்டிக்கு முன்பே நான் என்னுடைய அனுபவத்தை கூறினேன். அப்போது அவர் என்னிடம் விக்கெட்டுக்காக ஓட வேண்டாம். ஒரே லென்த்தில் வீசி உங்கள் பந்துவீச்சை ரசியுங்கள்.
அப்போது விக்கெட் விழவில்லை என்றால் என்னிடம் வந்து கேளுங்கள். அதற்குப் பிறகு நான் நன்றாக பந்து வீசினேன் விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். ஆஸ்திரேலியா எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். ஏனென்றால் இந்த ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகம் என ஒரு வேகப்பந்து வீச்சாளர் விரும்பும் அனைத்தையும் ரசிக்கலாம். எனவே உங்கள் பந்துவீச்சை ரசிப்பதற்கு உங்களுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை கிடைக்கும். என்று கூறினார்.
______________________________________________________________________________________
ஜப்பான் அணிக்கு 340 ரன்கள் இலக்கு
8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். சூர்யவன்ஷி 23 ரன்களிலும், ஆயுஷ் மத்ரே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் தனது பங்குக்கு 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மிடில் ஓவர்களில் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது அமான்- கார்த்திகேயா ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கார்த்திகேயா 57 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. ஜப்பான் தரப்பில் கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜப்பான் பேட்டிங் செய்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி
12 Jan 2025துபாய் : துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி பெற்றுள்ளது.
-
சென்னை புத்தக கண்காட்சி நிறைவு
12 Jan 2025சென்னை : சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
-
மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு
12 Jan 2025இம்பால் : மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடிபொருள்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
-
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
12 Jan 2025சிதம்பரம் : பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்ற
-
ஆஸி. வெற்றியுடன் தொடக்கம்
12 Jan 2025ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நேற்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது.
-
ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பி.சி.சி.ஐ.
12 Jan 2025மும்பை : ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார் என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் தேர்வு
12 Jan 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பி.சி.சி.ஐ. செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார செலவுக்காக வாக்காளர்களிடம் ரூ. 40 லட்சம் கேட்கும் டில்லி முதல்வர் அதிஷி
12 Jan 2025புதுடில்லி : டில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ.
-
ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் தூரம் 3 மீட்டராக குறைப்பு
12 Jan 2025புதுடெல்லி : ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
ஒடிசா: தீ விபத்தில் 2 சிறுவர்கள் பலி
12 Jan 2025புவனேஸ்வர் : ஒடிசாவின் பவுத் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
-
2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடக்கம் : பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
12 Jan 2025மும்பை : 2025 -18-வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபார சதம்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
12 Jan 2025ராஜ்காட் : அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: வங்கதேச, நியூசி. அணிகள் அறிவிப்பு
12 Jan 2025டாக்கா : சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்கதேச, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 பிரிவாக...
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.