Idhayam Matrimony

சென்னை எழும்பூர் -தூத்துக்குடி இடையே 145 ஆண்டுகளை நிறைவு செய்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்

புதன்கிழமை, 1 ஜனவரி 2025      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.

தெற்கு ரயில்வே இயக்கி வரும் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இதற்கு முன்னணி இடமுண்டு. அது மட்டுமல்லாமல், நாட்டின் மிகப் பழமையான பயணிகள் விரைவு ரயிலாகவும் இது உள்ளது. 1880ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில், சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய முத்துநகர் விரைவு ரயில், தொடர்ந்து 145 ஆண்டுகள் தனது இயக்கத்தை நிறைவு செய்திருக்கிறது.

தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு மக்களைக் கொண்டு சென்றதோடு, பல்வேறு வகையான மக்களை இணைத்தப் பெருமையையும் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 11 மணி நேரம் பயணித்து தூத்துக்குடி சென்றடையும். இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைத்துள்ளது. சுமார் 17 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 21 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து