எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறை, தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்றால் காவல் துறை வழக்கு போடுகிறது. நான் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன்... தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் மக்கள் ஊர்வலங்கள் நடத்தக்கூடாதா? தமிழ்நாட்டிலே மக்கள் இயக்கங்கள் நடத்தக்கூடாதா? மக்கள் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா? ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து கைது செய்து விட்டால் முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? என்று அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய வீடியோவை வெளியிட்டு, ஸ்டாலின் மாடல் என்பது அதிகார அடக்குமுறைக்கான பாசிச மாடல் தான் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் இத்தகைய வாக்குமூலங்களே சாட்சி என்று தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


