எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்க மக்கள் தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி ரோகிணி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக பேரழிவு என்பதற்கு குறையாத ஆட்சி உள்ளது. இதை டெல்லி மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த பேரழிவை பொறுத்துக்கொள்ள முடியாது, மாற்றம் வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த மாற்றத்தை பா.ஜ.க. கொண்டு வரும்.
டெல்லியில் செயல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறுத்திவிடும் என்ற அச்சத்தை ஆம் ஆத்மி அரசு பரப்புகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது. ஆம் ஆத்மி அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட மத்திய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் தேக்கம் மற்றும் மாசுபாடு என டெல்லியின் பேரழிவு அரசாங்கம் ஒவ்வொரு சீசனையும் ஒரு அவசரநிலையாக மாற்றியது. எனவே, ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் இருந்து அகற்றினால் மட்டுமே, வளர்ச்சி மற்றும் நல்லாட்சி என்ற இரட்டை இயந்திரம் வரும். மக்களவை தேர்தலின்போது டெல்லியில் பா.ஜ.க.வுக்கு ஆசி வழங்கிய மக்கள், தற்போது சட்டசபை தேர்தலில் ஆசி வழங்க தயாராகி வருகின்றனர். டெல்லி மக்களின் இதயத்தை வெல்வதற்கும், பேரழிவிலிருந்து விடுபடுவதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


