Idhayam Matrimony

மீண்டும் ஒரு சம்பவம்: குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      தமிழகம்
Kerala--2025-01-09

கன்னியாகுமரி, மீண்டும் ஒரு சம்பவமாக குமரிக்கு கழிவுகளை ஏற்றி வந்த கேரளாவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகள் உள்ளிட்டவை எல்லையை தாண்டி கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 5 வாகனங்களில் இறைச்சி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் உள்பட பல்வேறு உணவு கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து