எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : வாக்காளர் பட்டியலில் உத்தர பிரதேசம், பீகாரில் இருந்து வந்தவர்களை போலியாக சேர்க்க முயற்சி நடப்பதாக கூறிய கெஜ்ரிவாலை கண்டித்து அவர் வீட்டை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
டெல்லியில் அடுத்த மாதம் 5-ந்தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். நியூடெல்லி தொகுதியில் தன்னை தோற்கடிப்பதற்காக 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 15 முதல் ஜனவரி 8 வரை நடைபெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கெஜ்ரிவால் புகாரை கண்டித்து பா.ஜ.க.-வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுப்பதற்கான போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறு கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


