எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நீட் ரத்து சினிமா பஞ்ச் டயலாக் கிடையாது என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று பிரசாரம் செய்த தற்போதைய ஆட்சியாளர்கள், இப்போது, நீட் தேர்வை ரத்துசெய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனக்கூறி மக்களை ஏமாற்றி வருவதாக த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்திருந்தார்.
விஜய்யின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது; "நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம். இது தமிழக மக்களுக்கும் தெரியும். கலைஞர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது. நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும். சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும். சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது." இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


