எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.
பொருளாளர் பதவி...
இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார். இதனையடுத்து நிரந்தர செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு இறங்கியது.
மேலும் பொருளாளர் பதவியும் காலியாக இருந்தது. இந்த பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். அதன்படி செயலாளராக தேவஜித் சைகியாவும், பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


