எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று மதுரை பாலமேட்டிலும், இன்று அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. இதன்படி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. இதனை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.
ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. எனினும், 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தனர். அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் இடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக பாலமேடு ஜல்லக்கட்டு போட்டி தொடங்கியவுடன் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நடந்து முடிந்த நான்கு சுற்றுகளில் மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 6 பேர் என மொத்தமாக 19 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்காவது சுற்று முடிவில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


