எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜல்லிக்கட்டு விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழர் திருநாளை தமிழர்களுக்கு ஏமாற்று திருநாளாக தி.மு.க. அரசு அமைத்துவிட்டது. இந்த தை திருநாளில் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இங்கு ஊர் கமிட்டி, ஊர் பொதுமக்களை, மண்ணின் மைந்தர்களை ஒதுக்கிவிட்டனர். அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி ஜல்லிக்கட்டு விழாவாக அமைச்சர் மூர்த்தி நடத்தி வருகிறார். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். அப்போதுதான் அந்த சாமிக்கு பெருமை. ஆனால் இன்றைக்கு அரசு எந்திரத்தை தி.மு.க. கட்சி எந்திரமாக வைத்து நடத்தி, ஊர் கமிட்டியை ஊர் எல்லையில் நிறுத்தி விட்டார்கள். வாடிவாசலில் தி.மு.க. கட்சிகளை வைத்து விழாவை தொடங்கி உள்ளார்கள். இது ஜல்லிக்கட்டு விழாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜல்லிக்கட்டு மதிப்பை சிதைப்பதாக உள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து தரப்பினரும் பேசி இருக்கிறார்கள். ஆன்லைன் பதிவில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பாடாமல் விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


