எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி நேற்று அறிமுகப்படுத்தியது. அதனை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலங்கானா முதல்வர், “டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சி அதன் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.” என்று தெரிவித்தார்.
கடந்த வாரத்தில், பெண் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. முன்னதாக, ஜன.8-ம் தேதி காங்கிரஸ் கட்சி‘ஜீவன் ரக்ஷா யோஜனா’என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோல், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், ஒரு ஆண்டுக்கு மாதம் தோறும் ரூ.8,500 வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியின் 70 தொகுதிகளுக்கு பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


