எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் வாங்க நாளை கடைசி நாள் மேலும் அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி நடைபெறும் என்று கடந்த 7-ம் தேதி அறிவிக்கப்பட்டது.10-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 17 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.
தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமாரின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருகின்றனர்.
வேட்புமனுக்களை வாபஸ் பெற வருகிற 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி வாக்குப்பதிவும், 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


