எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
உலக பொருளாதாரம் குறித்த தனது கணிப்பை அறிக்கையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஐஎம்எஃப், அதன் தொடர்ச்சியாக தனது புதிய அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் கணிக்கப்பட்டபடி இந்தியாவில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் தொடங்கும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்திருந்தது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டை விட சற்று அதிகமாகவும், வளர்ச்சிக் கணக்கில் தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் நிலையாக உள்ளதாகவும், உலக பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026ல் 3.3 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 2.7 சதவீதமாகவும், 2026-ல் 2.1 சதவீதமாகவும் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1 சதவீதமாகவும், 2026-ல் 1.4 சதவீதமாகவும் இருக்கும். ஜெர்மனியின் பொருளதார வளர்ச்சி 2025-ல் 0.3 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். பிரான்ஸ்ன் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.8 சதவீதமாகவும், 2026-ல் 1.1 சதவீதமாகவும் இருக்கும். இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 0.7 சதவீதமாகவும், 2026-ல் 0.9 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் அறிக்கை தெரிவிக்கிறது.
இதேபோல், ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.1 சதவீதமாகவும், 2026-ல் 0.8 சதவீதமாகவும் இருக்கும். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 1.6 சதவீதமாகவும், 2026ல் 1.5 சதவீதமாகவும் இருக்கும். கனடாவின் பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026-ல் 2 சதவீதமாக இருக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 4.6 சதவீதமாகவும், 2026-ல் 4.5 சதவீதமாகவும் இருக்கும். பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 3 சதவீதமாகவும், 2026-ல் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.
தொற்றுநோய்க்குப் பிறகு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் உலகளாவிய வளர்ச்சி 3.3 சதவீதமாக நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் சீராகக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு 4.2 சதவீதத்தையும் அடுத்த ஆண்டு 3.5 சதவீதத்தையும் இது எட்டுகிறது என்று ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஆராய்ச்சி இயக்குநருமான பியர்-ஆலிவர் கவுரிஞ்சாஸ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


