எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே இன்று காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த போர் நிறுத்தம் 3 கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
பணய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் என்ன? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி 6 வாரங்களை (42 நாட்கள்) கொண்டது. இன்று(ஞாயிற்றுகிழமை) காலை 8.30 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி) போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போர் நிறுத்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள பணய கைதிகளில் 33 பேரை 42 நாட்களுக்குள் விடுதலை செய்யும். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் முதல் நாளான இன்று(ஞாயிற்று கிழமை) பணய கைதிகளில் 3 பெண்களை ஹமாஸ் விடுதலை செய்யும்.
எஞ்சிய 30 பணய கைதிகள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் 6 வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுதலை செய்யப்படுவர். * இஸ்ரேலிய பணய கைதிகள் 33 பேர் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர், காயமடைந்தோர் என வகைப்படுத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
உயிருடன் உள்ள பணய கைதிகளில் ஒவ்வொரு பெண், குழந்தை, முதியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். (எடுத்துக்காட்டாக பணய கைதியாக உள்ள இஸ்ரேலிய குழந்தையை ஹமாஸ் விடுதலை செய்யும்போது அந்த குழந்தைக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும். அதேபோல், ஒரு பெண் பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும், ஒரு முதிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவர்).
காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுள்ள 9 பணய கைதிகளுக்கு ஈடாக 110 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். பணய கைதியாக உள்ள ஒவ்வொரு இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீராங்கனைகனைக்கு ஈடாக 50 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் காசாவில் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களான அவிரா மென்கிடு மற்றும் ஹசிம் அல் சயது ஆகியோருக்கு ஈடாக தலா 30 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவர். மேலும், 2011ம் ஆண்டு பணய கைதிகள் ஒப்பந்தபடி விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் 47 பேர் விடுதலை செய்யப்படுவர்.
போர் நிறுத்தத்தின் முதல்பகுதியில் (6 வாரங்கள்) காசா முனையில் உள்ள பணய கைதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர். போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் 33 பணய கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகளின் எண்ணிக்கை 65 ஆக இருக்கும். எஞ்சிய பணய கைதிகள் போர் நிறுத்தத்தின் 2ம் பகுதியில் பரிமாற்றம் செய்யப்படுவர்.
ஒட்டுமொத்தமாக போர் நிறுத்தத்தின் முதல் பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்கிறது. 33 பேருக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களில் 1,904 பேரை விடுதலை செய்கிறது. இஸ்ரேல் விடுதலை செய்யும் பாலஸ்தீனியர்களில் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களும் அடக்கம். இதில் பலர் பயங்கரவாத செயல்கள், துப்பாக்கி சூடு தாக்குதல்கள், குண்டுவெடிப்பு தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல், இஸ்ரேலியர்களை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும் அடக்கம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி? - இன்று கடைசி ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை
11 Feb 2025அகமதாபாத் : இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா அசத்தல்...
-
பஞ்சாப் முதல்வருடன் கெஜ்ரிவால் சந்திப்பு லூதியானா தொகுதியில் போட்டியிட திட்டம்?
11 Feb 2025புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'வீட்டுக்கு ஒரு ஓட்டு' விஜய்க்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர்
11 Feb 2025சென்னை: 'வீட்டுக்கு ஒரு ஓட்டு' என்ற அடிப்படையில் விஜய் கட்சிக்கு வாக்குகளை கைப்பற்ற பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
நீர் மின் உற்பத்தியில் தமிழக மின்வாரியம் புதிய மைல்கல்
11 Feb 2025சென்னை : மத்திய மின்சார ஆணையத்தில் நிர்ணயித்த மின்னுற்பத்தியை விட அதிக அளவு உற்பத்தி செய்துள்ளது.
-
கேரளாவுக்கு அதிவேக ரயில் தேவையில்லை: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரை
11 Feb 2025திருவனந்தபுரம் : நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன்
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
11 Feb 2025புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தை பூச திருநாள்: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
11 Feb 2025சென்னை : தைப்பூச திருநாளை திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
11 Feb 2025காரைக்கால் : இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளர்.
-
குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்குகிறது டோரண்ட் குழுமம்
11 Feb 2025அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.
-
அமெரிக்காவில் தொடரும் விமான விபத்துக்கள் - மேலும் ஒருவர் பலி
11 Feb 2025ஸ்காட்ஸ்டேல் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் ஜெட் விமானங்கள் அடிக்கடி வந்து செல்லும்.
-
கஜா புயல் இழப்பீடு கிடைக்காதவர்கள் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
11 Feb 2025சென்னை: கஜா புயல் இழப்பீடு கிடைக்கவில்லை என்று மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்: இஸ்ரேல் பணய கைதிகள் விவகாரத்தில் ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
11 Feb 2025வாஷிங்டன்: காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய
-
ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் வலைதள கணக்கு
11 Feb 2025சென்னை : நடிகை திரிஷாவின் சமூக வலைதள கணக்கு, இணையக்குறும்பர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
தமிழக அரசு மீது வீண் பழி சுமத்தும் அண்ணாமலையின் பகல் கனவு நிறைவேறாது: அமைச்சர் காந்தி
11 Feb 2025சென்னை : அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
11 Feb 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்
-
லாட்டரி விற்பனையாளர்கள் சேவை வரி கட்ட தேவையில்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
11 Feb 2025புதுடெல்லி: லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து உள்ளது.
-
மின்விளக்கு பழுது: அரசு நோட்டீஸ்
11 Feb 2025இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.
-
தேர்தல் வியூக மன்னா்களால் பயனில்லை: விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து
11 Feb 2025சென்னை : தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு
-
மதுரையில் தை தெப்பத்திருவிழா கோலாகலம்: தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர்
11 Feb 2025மதுரை : மதுரையில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தில் வலம் வந்து அருள்பாலித்த மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
-
கோர்ட்களில் அரசு சார்பில் வாதாட 39 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
11 Feb 2025சென்னை: சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோட்டு மதுரைக்கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
கண்ணியத்துடன் இறக்க காத்திருக்கும் முதல் பெண்மணி காரிபசம்மா
11 Feb 2025தேவநாகரி : கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக
-
தினம் ஒரு உச்சத்தை தொடும் தங்கம்: ஒரு கிராம் ரூ.8060, சவரன் ரூ.64,480
11 Feb 2025சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தினம் ஒரு உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.64480 ஆக விற்கப்பட்டது.
-
ராகுலின் சென்னை பயணம் ரத்து
11 Feb 2025சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் ஆய்வு மையம் தகவல்
11 Feb 2025சென்னை: தமிழகத்தில் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
-
ஐ.சி.சி. சிறந்த வீரர் ஜோமல் வாரிக்கன்
11 Feb 2025துபாய் : ஜனவரி மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. விருது...