எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 'கரும்பு விவசாயி' சின்னம் கோரப்பட்ட நிலையில், அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி சென்னையில் காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி அறிவித்தது. அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் 'கரும்பு விவசாயி' சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி, மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


