எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெக்சிகோ சிட்டி; அதிபர் டிரம்ப் அறிவிப்பை அடுத்து நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவோரை தங்கவைக்க மெக்சிகோ-அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள டிஜுவானா, ரெய்னோசா, மடாமரோஸ், எல் புன்ட்டோ உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 5 நாட்களில் இந்த கூடாரங்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாடு திரும்பும் மெக்சிகோ மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


