எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு: கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களால் தமிழ் மக்களிடையே பிரபலமானவர். கர்நாடக அரசின் திரைப்பட விருதுகள் கொரோனாவால் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை அம்மாநில அரசு இந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில், 2019 இல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான பயில்வான் படத்துக்காக சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விருதை ஏற்க மறுத்து கிச்சா சுதீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான பிரிவில் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது மரியாதையாக கருதுகிறேன். தேர்வுக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே விருதுகள் பெறுவதை நான் நிறுத்திக் கொண்டேன். திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த விருதை நான் பெறுவதைவிட அவர்களில் ஒருவருக்கு வழங்கினால் மகிழ்ச்சி. விருதை எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விப்பதை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன். தேர்வுக்குழு என்னை தேர்ந்தெடுத்தது மேலும் ஊக்குவிக்கிறது. தேர்வுக்குழு மற்றும் மாநில அரசிடம் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


