Idhayam Matrimony

சி.பி.ஐ. விசாரணை கோரி வி.சி.க. போராட்டம்: வேங்கைவயலில் போலீசார் குவிப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2025      தமிழகம்
vengaivayal 2025-01-25

Source: provided

வேங்கைவயல்: வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தொடர் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளதால் அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீர் திருப்பமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. இதன்படி வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியது.

முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு தெரிவித்தது. சம்பவம் நடந்து சுமார் 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி தொடர் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளதால் வேங்கைவயல், சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழையும் பகுதியான வெள்ளனூரில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தை சுற்றி 10 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிராக, வேங்கைவயல் கிராம மக்கள்  தர்ணாவில் ஈடுபட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து