எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்தார்.
டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5ல் நிகழவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், தலைநகரில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள் களையப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட விடியோ பதிவில், நகரில் அங்கீகரிக்கப்படாத இடங்களில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்தார். இந்தப் பகுதிகளில் அடிப்படை உள்கட்டமைப்பை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைத்தபோது ஒருசில காலனிகளில எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாமல் இருந்தது. எந்த அரசும் இங்கு வாழும் மக்களைப் பற்றி கவலையோ, எந்த பணியும் செய்யவில்லை. மேம்பாட்டுப் பணிகளை ஆம் ஆத்மி அரசு தொடங்கியது. நகரத்தில் உள்ள பல பகுதிகள் கழிவுநீர் குடிநீரை மாசுபடுத்தும் பிரச்னைகளில் மக்கள் சிக்கித் தவிக்கின்றது. ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால், நகரம் முழுவதும் உள்ள கழிவுநீர் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் கூறினார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


