எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாக்பத்: உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். ஜைன மத சீடர்கள், காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
பாக்பத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தால் அங்கு குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தில் பல பக்தர்கள் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக மேடை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
பாக்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் அஸ்மிதா லால் கூறுகையில், “பரவுத்தில் ஜைன மதத்தினரின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரமேடை இடிந்து விழுந்து 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு 20 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 20 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பா.ஜ.க. யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை. ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பா.ஜ.க. அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது? ” என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


