எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காயமடைந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்து துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டறிந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


