எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத்: 16 வயதுக்குட்பட்ட சிறார்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிடுதல் மற்றும் டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பாக தெலுங்கானா மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி விஜய்சென் ரெட்டி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பும், இரவு 11 மணிக்குப் பிறகும் தியேட்டருக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என்றும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


