எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர்,12 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் போலியான ஆவணங்கள் வைத்துக் கொண்டு பணிபுரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நல்லூர் பகுதியில் வட மாநிலத்தினர் தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்கி உள்ளவர்களின் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்தனர்.
அப்போது சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் 12 பேர் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து மாநகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


