எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களில் இரவு நேரங்களில் பயணிகள் தங்களுக்கான ரெயில் வரும் வரை காத்திருப்பது வழக்கம். இரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் பிளாட்பாரத்திலேயே தூங்கி விடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்களும் அவ்வப்போது மதுரை ரெயில் நிலையத்திற்குள் வந்து திருடி செல்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்றுமுன்தினம் மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கமுதி சின்ன உடப்பங்குளத்தை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் குமார் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி மகன் மணிகண்டன்(22) என தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில், இருவரும் பிளாட்பாரங்களிலும், ரெயில் நிலையத்தின் வளாகத்திலும் இரவு நேரங்களில் படுத்திருக்கும் பயணிகளிடம் செல்போன் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சிம்கார்டு இல்லாத 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


