Idhayam Matrimony

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

மதுரை, ஜகபர் அலிகான் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி (58) கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் புதைத்த இடத்திலேயே எக்ஸ்-ரே எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், உடலைத் தோண்டி எடுக்கும்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஊடகங்கள் உள்ளிட்ட யாரைக்கும் அனுமதி தரக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து