எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள் என்று
அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு இன்று (ஜனவரி 31-ம் தேதி) தொடங்குகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பாராளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி., ஜெயராம் ரமேஷ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ, பிரகலாத் ஜோஷி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


