எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: யமுனை நீரைக் குடியுங்கள், உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன் என்று கெஜ்ரிவாலுக்கு ராகுல் சவால் விடுத்துள்ளார்.
டில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
டில்லியில் புதன்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிப் பேசும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக முன்னாள் டில்லி முதல்வரின் முந்தைய வாக்குறுதியை சுட்டிக்காட்டி, அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார்.
மேலும், கறுமை நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கெஜ்ரிவால். உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தான் புதிய அரசியல் முறையைக் கொண்டு வருவேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும், யமுனையை 5 ஆண்டுகளில் சுத்தமாக்குவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்னமும் யமுனை அசுத்தமாகவே உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


