எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உத்தரப்பிரதேசம் : வசந்த பஞ்சமியான நேற்று பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கி வருகிறது 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர். கங்கா, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு மகா கும்பமேளா பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. தற்போது வரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளாவில் இந்தாண்டு 6 நாள்கள் விஷேசமாகக் கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் வசந்த பஞ்சமி.
வசந்த பஞ்சமி நேற்று கடைப்பிடிக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகின்றது. முக்கியமாக கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி மூன்றும் பிரசித்தி பெற்றவை. இதில் தை அமாவாசைக்குப் பின்வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாகக் கொண்டாடுகிறது. வசந்த பஞ்சமி வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி, நேற்று காலை 8 மணி வரையில் சுமார் 62,25,000 பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டது. சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்ட நிலையில் புனித நீராடிய பக்தர்களை மேலும் மகிழ்வித்தது. பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


