Idhayam Matrimony

காது குத்த மயக்க ஊசி: குழந்தை பரிதாப பலி

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

சாம்ராஜ்நகர் : காத குத்துவதற்காக குழந்தைக்கு மயக்க ஊசிபோடப்பட்டதால் உயிரிழந்தது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த தம்பதியர் காதணி விழா நடத்த திட்டமிட்டனர். இதனிடையே காது குத்துபோது குழந்தைக்கு காது வலிக்காமல் இருப்பதற்காக மயக்க ஊசி போட அவர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் குழந்தைக்கு இரு காதுகளிலும் மயக்க மருந்து ஊசி செலுத்தி உள்ளார். 

இதற்காக டாக்டர் ரூ. 200 கட்டணமாக வசூலித்துள்ளார். குழந்தைக்கு வீரியம் அதிகமான மயக்க ஊசியை போட்டதால் குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. மேலும் அந்த சிறிது நேரத்தில் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை மாவட்ட அரசு தலைமை மருந்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் டாக்டர் நாகராஜ் செலுத்திய ஊசியே மரணத்திற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட டாக்டரை பணிநீக்கம் செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் அலீம் பாஷா கூறுகையில், காது குத்தும்போது வலி ஏற்படாமல் இருக்க டாக்டர் மயக்க மருந்து கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை வலிப்பு ஏற்பட்டு இறந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். டாக்டரின் அலட்சியம் உறுதிசெய்யப்பட்டால், நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து