எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துஷான்பே : தஜிகிஸ்தானில் சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் உள்ள சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில கைதிகள் அங்கிருந்து தப்ப முயன்றனர். அவர்களை சிறைக் காவலர்கள் தடுத்தபோது, அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இந்த தாக்குதலில் 3 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதிகளை நோக்கி காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட கைதிகள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தஜிகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


