Idhayam Matrimony

டெல்லி முதல்வர் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2025      இந்தியா
Adishi 2024-02-05

புதுடெல்லி, டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிக்கு  ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் புதுடெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் பா.ஜ.க. விடமிருந்து கோடிக்காணக்கான ரூபாய் வாங்கியது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. வுடன் கூட்டு சேர்ந்ததாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் அதிஷி மற்றும் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று கூடுதல் தலைமை நீதிபதி பராஸ் தலால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த புகார் மீதான விசாரணை குறித்து வாதிட நேரம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் தீட்சித் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து