எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கட்டாக் : இந்திய அணிக்காக ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி என்று ஆட்ட நாயகன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
ரோகித் விரக்தி...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரோகித் வென்றார். இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அது தொடர்பாக இங்கிலாந்து அணியுடனான முதல் ஆட்டத்துக்கு பிறகும் இரண்டாவது ஆட்டத்துக்கு முன்பும் ரோகித் வசம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்வியும் இதில் கேட்கப்பட்டது. அதை கேட்டு ரோகித் விரக்தி அடைந்தார். ரோகித்தின் ஃபார்ம் குறித்து சமூக வலைத்தளத்திலும் விமர்சிக்கப்பட்டது.
2-வது போட்டியில் சதம்...
இந்த நிலையில் இது மாதிரியான கேள்விகளை நாம் தவிர்க்க முடியாது. களத்தில் நமது செயல்பாடு தான் இதற்கான பதிலாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் சொல்லி இருந்தார். இந்த சூழலில் தான் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் கண்டார்.
ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி...
“அணிக்காக ரன் சேர்த்ததில் மகிழ்ச்சி. இந்த தொடரில் இந்தப் போட்டி முக்கியமானது. நான் எப்படி பேட் செய்ய வேண்டுமென்பதை பிரித்து பார்த்தேன். கள சூழலை கருத்தில் கொண்டு விளையாடினேன். கடைசி வரை களத்தில் இருக்க விரும்பினேன். இந்த ஆடுகளம் கருப்பு மண் என்பதால் பந்து ஸ்கிட் ஆகி வரும் என்பது அனைவரும் அறிந்தது. அதற்கு தகுந்தபடி வியூகம் அமைத்தோம். ஃபீல்ட் பிளேஸ்மெண்டில் உள்ள கேப்பினை பயன்படுத்தி ரன் சேர்த்தேன். ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எனக்கு உதவினர்.
மாற்றப் போவதில்லை...
ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் ரன் சேர்ப்பது மிகவும் முக்கியம். அதை கடந்த போட்டியிலும், இந்தப் போட்டியிலும் செவ்வனே நாங்கள் செய்திருந்தோம். அதன் மூலம் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் எங்களால் விளையாட முடிகிறது. அணியாக நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் எனது மைண்ட் செட்டையும் நான் பேட்டிங் செய்யும் முறையையும் மாற்றப் போவதில்லை.” என ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


