எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
உக்ரைன், ரஷியா இடையேயான போர் நேற்று 1 ஆயிரத்து 86வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் தொடர்பாக ரஷிய அதிபருடன் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேவேளை, தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனின் கீவ் மாகாணத்தில் செர்னோபெல் அணு உலை உள்ளது. இந்த அணு உலையில் கடந்த 1986ம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அணு உலையில் இருந்து வெளியேறிய அணு கசிவால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அணு கசிவு பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து அணு உலை மூடப்பட்டது. ஆனாலும், அணு உலையில் இருந்து கதிரியக்கம் தொடர்ந்து வெளியேறிய நிலையில் அதை தடுக்க இரும்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செர்னோபெல் அணு உலை மீது ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


