Idhayam Matrimony

அயோத்தி தலைமை அர்ச்சகர் உடல் சரயு நதியில் ஜலசமாதி

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      இந்தியா
Ayodhya-temple 2024-02-16

Source: provided

லக்னோ : அயோத்தி தலைமை அர்ச்சகர் உடலை சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோவிலின் தலைமை அா்ச்சகா் மகந்த் சத்யேந்திர தாஸ்.  85 வயதான அவருக்கு இம்மாத தொடக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டு, லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவன (எஸ்.ஜி.பி.ஜி.ஐ.) மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் கடந்த 12-ம் தேதி காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள இல்லத்தில் மகந்த் சத்யேந்திர தாஸின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் சரயு நதியில் விடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நதியின் ஆழமான பகுதிக்கு சத்யேந்திர தாஸின் உடலை கொண்டுசென்ற அர்ச்சகர்கள் ஜலசமாதி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து