எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தி.மு.க. அரசு மீது நாளுக்கு நாள் மக்கள் அதிருப்தி அடைந்து வருவதால் 2026 ஆம் ஆண்டு அதி.மு.க. ஆட்சி மலர்வது உறுதியாகி இருப்பதாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை ஒட்டி, தமிழக முழுவதும் கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்களை நடத்தி தமிழக மக்களுக்கு ஜெயலலிதா ஆற்றிய அரும் பணிகளை நாட்டு மக்களிடையே கொண்டு செல்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பா வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் இலக்கிய அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், தமிழகத்தில் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்வதால் 2026 ஆம் ஆண்டு அதி.மு.க. ஆட்சி மலர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்பார் என்று தெரிவித்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரிட்டது போலவும், ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டது போலவும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவித்தார்.
அதி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் மக்கள் மன்றத்தில் ஆதரவு பெருகி வருவதாகவும் அவர் கூறினார். பின்னர் இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் ராயபுரம் மனோ, வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


