எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி) உத்தரவிட்டு உள்ளது.
கெஜ்ரிவால் டில்லி முதல்வராக பதவி வகித்த போது, சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். இந்த பங்களாவில் ரூ.45 கோடி செலவு செய்து புனரமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டதாக துவக்கத்தில் இருந்தே பா.ஜ.,வினர் குற்றம்சாட்டி வந்தனர். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.இந்த பங்களாவில் பா.ஜ., சார்பில் முதல்வராக பதவியற்பவர் வசிக்க மாட்டார் என அக்கட்சி அறிவித்து உள்ளது. இந்த பங்களா கட்டியதில் முறைகேடு நடந்ததாக, மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் டில்லி பா.ஜ., தலைவர் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த பங்களா தொடர்பாக ஆய்வு நடத்திய மத்திய பொதுப்பணித்துறை ஆய்வு செய்த அறிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்கு சி.வி.சி. உத்தரவிட்டு உள்ளது. இந்த பங்களா கட்டியதில் விதிமுறைகள் உள்ளதா என்பதை விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


