எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் திகழ்கிறது. பயனர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. கூடுதலாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஏ.ஐ. சாட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
அதே சமயம், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மோசடி செயல்களை கட்டுப்படுத்தி, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வாட்ஸ்அப் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா', பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை 'மெட்டா' நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) ஆகியவற்றின்படி, இந்தியாவில் சுமார் 80 லட்சத்து 45 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகளில், 1 லட்சத்து 66 ஆயிரம் கணக்குகள் கடுமையான விதிமீறல்கள் காரணமாக உடனடியாக முடக்கம் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள கணக்குகள் விசாரணைக்கு பின்னர் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


