எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வேலூர் : வேலூரில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கல்லூரி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் காட்பாடி அடுத்து ஆற்காடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் வெள்ளிக்கிழமை நிறுத்தி விட்டு திங்கட்கிழமை பஸ்சை இயக்குவது வழக்கம். இந்நிலையில் நிறுத்தி விடப்பட்டிருந்த பஸ்சில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது. இதைக் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த காட்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்ல. இந்த தீ விபத்தில் பஸ் முற்றிலும் சேதமடைந்தது.
திடீரென கல்லூரி பஸ் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


